India
‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்லச் சொல்லி இஸ்லாமிய இளைஞரை அடித்துக் கொன்ற குற்றவாளிகள்.. 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை !
ஜார்கண்டில் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிடக்கோரி இஸ்லாமிய இளைஞரை அடித்துக்கொன்ற குற்றவாளிகள் 10 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு தாட்கிடி கிராமத்தில் பைக் திருடியதாகக் கூறி கம்பத்தில் கட்டி வைத்து தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞரை 7 மணி நேரமாக சிலர் கொடூரமாகத் தாக்கினர். பெயரைக் கேட்டபின் ஜெய்ஸ்ரீராம், ஜெய் அனுமான் என கோஷமிடக் கூறிய நிலையில், இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
தொடர்ந்து போலீசாரால் மீட்கப்பட்ட தப்ரேஸ், 4 நாட்களிலேயே சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பிரேதப்பரிசோதனை முடிவில் மாரடைப்பு என முடிவுகள் வெளியான நிலையில், இதனை எதிர்த்து தப்ரேஸின் மனைவி தொடர்ந்த வழக்கு இன்று செராய்கேலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றவாளிகள் 10 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து 4 ஆண்டுகளுக்குப்பின் இவ்வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read
-
”10 வருடமாக மக்களைப் பற்றி கவலைப்படாத ஒரே பிரதமர் மோடிதான்” : பிரியங்கா காந்தி பேச்சு!
-
”பிரதமர் மோடி ஒரு பொய்யர் என்பதை நாடு நன்றாக அறிந்து விட்டது ” : ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்!
-
”இந்து - முஸ்லிம் பிரிவினை விளையாட்டு விளையாடும் மோடி” : ப.சிதம்பரம் கடும் தாக்கு!
-
“நிவேதாவின் முயற்சிகளுக்கு அரசு உடன் நிற்கும்” : திருநங்கை மாணவியை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர்!
-
இந்துக்களுக்காக கண்ணீர் விடும் பாஜக 10 ஆண்டு காலத்தில் இந்துக்களுக்காகச் செய்தது என்ன? : முரசொலி கேள்வி!