India
‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்லச் சொல்லி இஸ்லாமிய இளைஞரை அடித்துக் கொன்ற குற்றவாளிகள்.. 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை !
ஜார்கண்டில் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிடக்கோரி இஸ்லாமிய இளைஞரை அடித்துக்கொன்ற குற்றவாளிகள் 10 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு தாட்கிடி கிராமத்தில் பைக் திருடியதாகக் கூறி கம்பத்தில் கட்டி வைத்து தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞரை 7 மணி நேரமாக சிலர் கொடூரமாகத் தாக்கினர். பெயரைக் கேட்டபின் ஜெய்ஸ்ரீராம், ஜெய் அனுமான் என கோஷமிடக் கூறிய நிலையில், இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
தொடர்ந்து போலீசாரால் மீட்கப்பட்ட தப்ரேஸ், 4 நாட்களிலேயே சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பிரேதப்பரிசோதனை முடிவில் மாரடைப்பு என முடிவுகள் வெளியான நிலையில், இதனை எதிர்த்து தப்ரேஸின் மனைவி தொடர்ந்த வழக்கு இன்று செராய்கேலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றவாளிகள் 10 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து 4 ஆண்டுகளுக்குப்பின் இவ்வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!