India
கல்லூரி மாணவியை நடுரோட்டில் துரத்தித் துரத்தி கத்தியால் தாக்கிய இளைஞர்.. புனேவில் நடந்த கொடூரம்!
புனேவின் சதாசிவ் போத் என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளம் பெண்ணும், வாலிபரும் சென்றுள்ளனர். அப்போது அவர்களை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தினார்.
பின்னர் அந்த இளைஞர் உடனே மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென வாகனத்தில் வந்த இளம் பெண்னை தாக்கியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அப்பெண் அந்த வாலிபரிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளார். இருப்பினும் அந்த இளைஞர் அவரை துரத்திச் சென்றுள்ளார்.
இதைப்பார்த்த அங்கிருந்த பகுதி மக்கள் உடனே அந்த வாலிபரை பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் போலிஸார் அந்த வாலிபரிடம் விசாரித்தபோது முல்ஷி பகுதியைச் சேர்ந்த சாந்தனு லஷ்மன் என்பது தெரியவந்தது. மேலும் தாக்குதலுக்கு உள்ளான பெண் கல்லூரியில் படித்து வருவது தெரியவந்தது.
அவரை மீட்ட போலிஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தனர். தற்போது அவர் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவியை இளைஞர் துரத்தித் துரத்தி தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”