India
டீ கடையாக மாறிய Audi கார்.. தினமும் டீ விற்று வரும் 2 இளைஞர்கள்: எங்குத் தெரியுமா?
மிகவும் விலை உயர்ந்த மற்றும் சொகுசு கார்களில் ஒன்றாக Audi கார் கருதப்படுகிறது. இந்நிலையில் Audi காரில் இரண்டு இளைஞர்கள் டீ விற்பனை செய்து வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர்கள் மன்னு சர்மா மற்றும் அதித் காஷ்யப். இந்த இரண்டு இளைஞர்களும் சேர்ந்து Audi காரில் லோகந்த்வாலா சாலையின் ஓரத்தில் தினமும் டீ விற்பனை செய்து வருகின்றனர். இவர்களின் டீ விற்பனை வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் இளைஞர்கள் இரண்டு பேருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். "எந்த வணிகமும் ஒரு சிறு வணிகம் அல்ல, கடின உழைப்பை மதிக்கவும். வாழ்த்துக்கள் சகோதரரே" என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர் 'இது ஒரு சாத்தியமான வணிகம் அல்ல' என்றும், "அவரால் Audi கார் வாங்கமுடிந்தாலும் இன்னும் டீ விற்க வேண்டும் என்றால் அவர் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் புகழ் மட்டுமே விரும்புவோர் அல்லது கல்வியில் ஏதேனும் தவறு உள்ளது" என மற்றொரு பயனர் விமர்சனம் செய்துள்ளார். இப்படி Audi காரில் டீ விற்பனை செய்து வரும் இளைஞர்களுக்கு ஒரு புறம் பாராட்டும் மற்றொரு புறம் விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!