India
முதல்முறை பூப்பெய்திய சிறுமி.. மாதவிடாய் ரத்தக்கறையை கண்டு கோவத்தில் தங்கையை கொலைசெய்த கொடூர அண்ணன் !
மும்பை அருகில் உள்ள உல்லாஸ் நகரைச் சேர்ந்தவர் சுமித். இவரின் வீட்டில் இவரின் மனைவியோடு ஸ்மித்தின் 12 வயது சகோதரியும் வசித்து வந்துள்ளார். இதில் வழக்கம்போல சுமித்தின் சகோதரி விளையாடிக்கொண்டிருந்து வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது அவரின் ஆடையில் ரத்தக்கறை இருந்துள்ளது. இதனைப் பார்த்த சுமித்ஆடையில் எப்படி ரத்தம் வந்தது என தனது சகோதரியிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த சிறுமியால் சரிவர பதில் சொல்ல முடியவில்லை. இதனால் அவர் சகோதரரிடம் உரிய காரணத்தால் கூறாமல் இருந்துள்ளது.
சகோதரியின் இந்த நடவடிக்கையால் சந்தேகம் அடைந்த சுமித் தனது சகோதரி யாரோ ஒருவருடன் பாலியல் உறவில் இருந்துள்ளார் என்றும், அதனால்தான் அவரின் உடையில் ரத்தகரை இருப்பதாகவும் சந்தேகம் அடைந்து தனது சகோதரியை அடித்து தாக்கியுள்ளார்.
மேலும், சகோதரியின் வாயில் துணியை வைத்து அடைத்து உடம்பு முழுவதும் தீயால் சூடு வைத்துள்ளார். இதில் வலியில் முனங்கிய சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் சுமித்திடம் இருந்து சிறுமியை மீட்டு படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது சிறுமி பூப்பெய்தியதால் அவருக்கு முதல்முறை மாதவிடாய் வந்ததும் இதனை சிறுமியால் சகோதரரிடம் புரியவைக்காத நிலையில்,சந்தேகம் அடைந்து சகோதரர் சிறுமியை அடுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சுமித் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் அவரின் மனைவிக்கு தொடர்பு இருக்கிறதா என போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லை : பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!” : ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழ்நாடு அரசின் முடிவால் செவிலியர்கள் மகிழ்ச்சி!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
ரூ.165 கோடியில் கட்டப்பட்டு வரும் 700 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்! : உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!
-
“நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும்!” : SIR குறித்து எச்சரித்த முரசொலி தலையங்கம்!