India
தேசிய கட்சி அந்தஸ்தை இழந்த திரிணாமுல், CPI.. வேறு எந்த எந்த கட்சிகள் தேசிய அந்தஸ்தை இழந்தது?
இந்தியாவில் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் தேசிய கட்சி என்ற அந்தஸ்து பெற வேண்டும் என்றால் 4 மாநிலங்களில் 6% வாக்குகள் பெற்று இருக்க வேண்டும் அப்போதுதான் தேசிய கட்சி என்ற அந்தஸ்து பெற முடியும்.
ஒரு முறை தேசிய அந்தஸ்து பெற்றுவிட்டால் மட்டும் போதாது ஒவ்வொரு தேர்தலிலும் 6% வாக்குகளுக்கு மேல் பெற்றுக்கொண்டே இருந்ததால்தான் தேசிய கட்சி என்ற அந்தஸ்தில் தொடரமுடியும். 6%க்கு கீழ் வாக்குகள் குறைத்தால் தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தலைமைத் தேர்தல் அணையும் திரும்பப் பெற்று விடும்.
அந்த வகையில்தான் தற்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்துள்ளது. அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தேசிய கட்சிகள் அந்தஸ்தை இழந்துள்ளது.
மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப், கோவா, குஜராத் மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றதன் மூலம் தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. கட்சி தொடங்கிய பத்து ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சி தேசிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
தற்போது பா.ஜ.க, காங்கிரஸ், சி.பி.ஐ(எம்), பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய 6 கட்சிகள் மட்டுமே தற்போது தேசிய கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அதேபோல் உத்தர பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தளம், ஆந்திராவில் பாரத் ரஷ்டிர சமிதி, மணிப்பூரில் பிடிஏ கட்சி, புதுச்சேரியில் பமக, மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.பி, மிசோரமில் எம்.பி.சி ஆகிய கட்சிகள் மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை இழந்துள்ளன.
Also Read
-
மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன்... எதிர்ப்பாளர்களை மிரட்டும் பாஜக அரசு - நடந்தது என்ன ?
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!