India
மசூதிக்குள் நுழைந்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷமிடக் கோரி இமாமை தாக்கிய கும்பல்.. மராட்டியத்தில் அதிர்ச்சி !
மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பாஜக இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அன்வா கிராமத்தில் மசூதி ஒன்று இருக்கிறது. இந்த மசூதியில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று மசூதியின் இமாம் தொழுகை நடத்திக்கொண்டிருந்தபோது முகத்தை துணியால் மறைந்த சிலர் மசூதிக்குள் நுழைந்து தொழுகையில் இருந்த இமாமை 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால், இமாம் அவ்வாறு கோஷமிட மறுத்த நிலையில்,அவரை அந்த கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்துள்ளார். ஆனாலும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் அந்த இமாமின் தாடியையும் வெட்டியுள்ளது. அதன்பின்னர் அங்கு வந்தவர்கள் அந்த இமாமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இது குறித்து காவல்நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு வந்த போலிஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பா.ஜ.க.வின் பெயரைப் பயன்படுத்த த.வெ.க அச்சப்படுவது ஏன்? - தொடரும் கள்ள மெளனம்!
-
மாணவர்களுக்கு இருக்கும் துணிச்சல்கூட இந்த 'டம்மி' முதல்வருக்கு இல்லை என்பது வெட்கக்கேடு : திமுக ஐடி விங்!
-
தூத்துக்குடி முத்துக்களுக்கான புவிசார் குறியீடு எப்போது? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!
-
டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாணவர் அமைப்பினர் கைது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!
-
நீட் தேர்வின் ஆபத்தை முதன்முதலில் எச்சரித்தது தி.மு.க.தான் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!