India
மசூதிக்குள் நுழைந்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷமிடக் கோரி இமாமை தாக்கிய கும்பல்.. மராட்டியத்தில் அதிர்ச்சி !
மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பாஜக இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அன்வா கிராமத்தில் மசூதி ஒன்று இருக்கிறது. இந்த மசூதியில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று மசூதியின் இமாம் தொழுகை நடத்திக்கொண்டிருந்தபோது முகத்தை துணியால் மறைந்த சிலர் மசூதிக்குள் நுழைந்து தொழுகையில் இருந்த இமாமை 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால், இமாம் அவ்வாறு கோஷமிட மறுத்த நிலையில்,அவரை அந்த கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்துள்ளார். ஆனாலும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் அந்த இமாமின் தாடியையும் வெட்டியுள்ளது. அதன்பின்னர் அங்கு வந்தவர்கள் அந்த இமாமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இது குறித்து காவல்நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு வந்த போலிஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!