India
செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!
கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்குத் தெரிந்த ஆண் நண்பர் ஒருவர் அவருக்கு செல்போன் வாங்கி தருவதாகக் கூறியுள்ளார். இதை நம்பிய சிறுமி அவர் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அந்த நபர் சிறுமியை இருசக்கர வாகனத்தில் யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த ஆண் நண்பர் உட்பட 4 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும் இதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பிறகு அவரை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அடித்து நடந்தவற்றை வெளியே சொன்னால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். பின்னர் சிறுமை ஊருக்கு வெளியே கொண்டு சென்று விட்டுள்ளனர். பிறகு அங்கிருந்து வீட்டிற்கு சென்று சிறுமி நடந்தவற்றைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் சிறுமி வன்கொடுமை செய்த நான்கு பேரையும் அடையாளம் காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து நான்கு பேரையும் போலிஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!