India
பெண் நாயை தேடி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.. வீடியோ வெளியானதால் டெல்லியில் அதிர்வலை !
பாலியல் வன்கொடுமை என்பது அன்றாடம் நாம் தினமும் படிக்கும் ஒரு செய்தியாக மாறிவிடுகிறது. பெண்களை குறிவைத்து சில ஆண்கள் இப்படி செய்வது உண்டு. ஆனால் சில இளைஞர்கள் தங்கள் ஆசையை கட்டுப்படுத்த இயலாமல் போதையில் வயதான பெண்களிடமும், மூதாட்டியிடமும் இவ்வாறு தகாத முறையில் நடந்துகொள்ளும் செய்திகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதையெல்லாம் மீறி, மனிதர்களை தாண்டி சில பேர் மிருகங்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வார். இதுபோல் பல விஷயங்கள் நடந்துள்ளது. தற்போதும் இதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது திருமணமான நபர் ஒருவர் நாய் ஒன்றை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரை தற்போது காவல்துறை கைது செய்துள்ளது.
டெல்லியில் இந்தர்புரி நகர் ஜே ஜே காலனியை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ம் தேதி, நிகழ்ச்சி ஒன்று முடித்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டு அருகே ( பி பிளாக் பகுதியில்) நாய் ஒன்று கத்திக்கொண்டிருந்தது. அதன் சத்தம் வேறுமாறி இருந்ததால் சந்தேகமடைந்த அந்த நபர் அங்கே சென்று பார்த்துள்ளார்.
அப்போது இந்த நபரின் பக்கத்து வீட்டுக்காரர் சதீஷ் என்பவர் அந்த நாயை பாலியல் வன்கொடுமை செய்துகொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், இது தொடர்பாக தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் இதனை அருகில் இருந்த காவல்நிலையத்தில் காண்பித்து புகாரும் அளித்தார். அந்த புகாரில் குற்றம்சாட்டப்பட்ட சதீஷ் மதுபோதைக்கு அடிமையானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அவரை காவல்துறையினர் தேடி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு குற்றம்சாட்டப்பட்ட சதீஷின் தாயார் தனது மகனை காப்பாற்றும் நோக்கில் விளக்கம் ஒன்றை அளித்ததாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் சதீஷை கைது செய்த அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் இதே போல் திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும் நபர் ஒருவர் டெல்லியில் உள்ள ஹரிநகரில் இருக்கும் பூங்கா ஒன்றில், பெண் நாயை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த நபர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதோடு கடந்த அக்டோபர் மாதம் மும்பையில் 6 மாத நாய் குட்டி ஒன்றை உணவு டெலிவரி ஆகாஷ் (வயது 25) என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தொடர்பான வீடியோவும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு முன்பு மகாராஷ்டிராவில் எருமையை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!
-
“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!