India
திருமண தேதியை மறந்த கணவன்.. குடும்பத்துடன் சேர்ந்து கும்மாங்குத்து குத்திய மனைவி: போலிஸில் புகார்!
மும்பை அடுத்த பைகன்வாடி பகுதியைச் சேர்ந்தவர் விஷால் நாங்க்ரே. இவரது மனைவி கல்பனா. இந்த தம்பதிக்குக் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், இந்த தம்பதியின் திருமண நாள் கடந்த 18ம் தேதி வந்துள்ளது. அப்போது கணவன் ஆசையாகத் திருமண வாழ்த்து சொல்லி பரிசு கொடுப்பார் என மனைவி கல்பனா நினைத்துள்ளார். ஆனால் திருமண நாளை மறந்து விட்டு வழக்கம்போல் விஷால் நாங்க்ரே வேலைக்குச் சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கல்பனா கணவன் மீது சண்டையிட்டுள்ளார். பிறகு அடுத்தநாள் வேலை முடித்து விட்டு கல்பனா வந்தபோது வீட்டிற்கு வெளியே தனது வாகனத்தை விஷால் நாங்க்ரே கழுவிக் கொண்டிருந்துள்ளார்.
இது மேலும் கல்பனாவை ஆவேசப்பட வைத்துள்ளது. மீண்டும் கணவனுடன் சண்டைபோட்டுள்ளார். பிறகுத் தனது தாய், சகோதரர்களை வீட்டிற்கு வரவைத்து கணவன் என்றும் பாராமல் அனைவரும் குடும்பமாகச் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர்.
இதோடு விடாமல் இரவு விஷால் நாங்க்ரேவின் தாயார் வீட்டிற்குச் சென்று அங்கேயும் சண்டைபோட்டுள்ளனர். அப்போது மாமியாரை கல்பனா கண்ணத்தில் அடித்துள்ளார். மேலும் விஷால் நாங்க்ரேவுடன் இனி ஒன்றாக இருக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து விஷோல் நாங்க்ரே தனது மனைவி மற்றும் அவரது தாய், சகோதரர் ஆகியோர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் படி போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!