India
'போலிஸ் அங்கிள்' .. தந்தை மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த 8 வயது சிறுவன்: ஷாக் காரணம்!
உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்திற்குட்பட்ட காசியா பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஆரியன் மவுரியா. 8 வயது சிறுவனான இவன் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்றுள்ளான்.
இப்போது சிறுவனைப் பார்த்த காவல்துறை அதிகாரி அசுதோஷ் குமார் திவாரி என்பவர் அவனை அழைத்து காவல்நிலையத்திற்கான வந்த காரணம் என்ன என்று கேட்டுள்ளார். அப்போது சிறுவன், தனது தந்தை மீது புகார் கொடுக்க வந்துள்ளேன் என கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சிறுவனின் தந்தை தர்மபிரியா. இவர் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளிடம் சண்டை போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த சிறுவன் ஆரியன் தனது தந்தை குடிக்காமல் இருக்க மதுக்கடைகளை மூட வேண்டும் என கூறியுள்ளார்.
பிறகு போலிஸார் சிறுவனின் தந்தையைக் காவல்நிலையத்திற்கு அழைத்து இனி குடிக்கக் கூடாது என அவரிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டு எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர். பின்னர் மாணவரின் இந்த நல்ல குணத்தைப் பார்த்த அசுதோஷ் குமார் திவாரி சிறுவனின் கல்வி செலவை ஏற்க முன்வந்துள்ளார்.
தனது தந்தை தினமும் குடிப்பதாகக் காவல்நிலையத்தில் 8 வயது சிறுவன் புகார் கொடுக்க வந்த சம்பவம் உத்தர பிரதேச மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.
Also Read
-
போட்டோவுக்கு யார் போஸ் கொடுப்பது.. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!
-
“சிபிஎஸ்இ-யில் 3-வது மொழி தேர்ச்சி கட்டாயம்.. மொழித் திணிப்பின் உச்சம்” : தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!
-
ஆதிதிராவிடர் சொல் விவாதம் தேவை ; த.வெ.க அரசு அவசரப்படக்கூடாது : முரசொலியின் ஆலோசனை என்ன?