India
'போலிஸ் அங்கிள்' .. தந்தை மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த 8 வயது சிறுவன்: ஷாக் காரணம்!
உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்திற்குட்பட்ட காசியா பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஆரியன் மவுரியா. 8 வயது சிறுவனான இவன் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்றுள்ளான்.
இப்போது சிறுவனைப் பார்த்த காவல்துறை அதிகாரி அசுதோஷ் குமார் திவாரி என்பவர் அவனை அழைத்து காவல்நிலையத்திற்கான வந்த காரணம் என்ன என்று கேட்டுள்ளார். அப்போது சிறுவன், தனது தந்தை மீது புகார் கொடுக்க வந்துள்ளேன் என கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சிறுவனின் தந்தை தர்மபிரியா. இவர் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளிடம் சண்டை போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த சிறுவன் ஆரியன் தனது தந்தை குடிக்காமல் இருக்க மதுக்கடைகளை மூட வேண்டும் என கூறியுள்ளார்.
பிறகு போலிஸார் சிறுவனின் தந்தையைக் காவல்நிலையத்திற்கு அழைத்து இனி குடிக்கக் கூடாது என அவரிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டு எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர். பின்னர் மாணவரின் இந்த நல்ல குணத்தைப் பார்த்த அசுதோஷ் குமார் திவாரி சிறுவனின் கல்வி செலவை ஏற்க முன்வந்துள்ளார்.
தனது தந்தை தினமும் குடிப்பதாகக் காவல்நிலையத்தில் 8 வயது சிறுவன் புகார் கொடுக்க வந்த சம்பவம் உத்தர பிரதேச மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.
Also Read
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !
-
"ஒரே நாடு - ஒரே தேர்தல் முறை சரியானது அல்ல" - உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா !
-
மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன்... எதிர்ப்பாளர்களை மிரட்டும் பாஜக அரசு - நடந்தது என்ன ?
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!