India
சாலையில் செல்லும்போது திடீரென பற்றி எரிந்த கார்.. பதறியடித்து ஓடிய மக்கள்: உயிர் தப்பிய 6 பேர்!
கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 6 பேர் காரில் இடுக்கி மாவட்டத்திற்குட்பட்ட மூணாறு பகுதி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென பழுதாகி நின்றுள்ளது.
இதையடுத்து பழுது சரி செய்து மீண்டும் ஆறு பேரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதைப்பார்த்த ஓட்டுநர் அதிர்ச்சியடைந்து உடனே காரை நிறுத்தியுள்ளார்.
பின்னர் காரில் இருந்த 6 பேரும் வெளியே வந்தனர். அவர்கள் வெளியே வந்த சில நிமிடத்திலேயே கார் முழுவதும் பற்றி எரிந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயைச் சிறிது நேரத்தில் அணைத்தனர்.
இருப்பினும் கார் தீயில் முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
Also Read
-
“தேர்தலுக்கு முன்பாக கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன்?” : பதிலளிக்க ED-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
“Covishield தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்படும்” - மருந்து நிறுவனத்தின் அறிவிப்பால் ஷாக் - பின்னணி என்ன?
-
”மோடி தொடர்ந்து பேச பேச பாஜக படுதோல்வி அடைவது உறுதி” : செல்வப்பெருந்தகை!
-
பாலியல் புகார் : பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா கட்சியிலிருந்து இடைநீக்கம்!
-
”போலி வீடியோக்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற கட்சி பா.ஜ.க” : மல்லிகார்ஜூன கார்கே பதிலடி!