India
விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் - கருகிய கார்.. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி: என்ன நடந்தது ?
இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருபவர் இளம் வீரர் ரிஷ்ப் பண்ட். தனது அதிரடி ஆட்டத்தால் தனக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். வங்கதேசத் தொடரை முடித்துக் கொண்டு ரிஷப் பண்ட் இந்தியா திருப்பினார். இதையடுத்து அவர் டெல்லியிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றுள்ளார்.
இதையடுத்து ஹம்மத்பூர் ஜால் என்ற பகுதியில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்த டிவைடரில் மோதியது. இதனால் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது.
இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து ரிஷப் பண்டை மீட்டுள்ளனர்.
பிறகு அவரை அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தில் கார் முழுமையாக எரிந்து சேதடைந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதாலேயே ரிஷப் பண்ட் உயிர் தப்பியுள்ளார். இருப்பினும் அவருக்குத் தலை மற்றும் காலில் பலத்த தாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் ரிஷப் பண்ட் மட்டுமே இருந்ததும், தூக்கமின்மையால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.
Also Read
-
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!