India

FRAUD ALERT.. மாணவர்களே எச்சரிக்கை..! - தேர்வுகளுக்கு பணம் கட்டச்சொல்லி CBSE பெயரில் போலி இணையதளம் !

CBSE பள்ளிகளில் இந்தியாவில் இருந்து பல்வேறு மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். ஆண்டுதோறும் அவர்களுக்கு 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தனிப்பட்ட தேதியில் தான் நடைபெறும். அதேபோல், தேர்வுகளின் முடிவுகளும் தாமதமாகவே வெளியாகும்.

நடப்பு கல்வியாண்டின் தமிழக அரசின் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடர்பான அட்டவணை தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அண்மையில் வெளியிடப்பட்டது. ஆனால் சிபிஎஸ்இ பாடப்பிரிவுகளுக்கு இன்னமும் பொதுத்தேர்வுகள் தேதி அறிவிக்கப்படாத நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதன் இணையதளத்தில் அட்டவணை வெளியாகியுள்ளதாக தகவல்கள் வெளியானது.

அந்த இணையதளத்தில் தேதித்தாள், அனுமதிச்சீட்டு பற்றிய முக்கிய தகவல்களை அந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தற்போது CBSE கல்வி வாரியம் தங்களது இணையதளம் போல் போலியான இணையதளம் ஒரு உருவாக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக CBSE வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “CBSE அதிகாரபூர்வ இணையதளமான www.cbse.gov.in-ஐ போல https://cbsegovt.com என்ற பெயரில் சில சமூக விரோதிகள் இணையதளம் உருவாக்கி உள்ளனர்.

CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்குவதற்கு பணம் டெபாசிட் செய்யுமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு செய்திகளை அனுப்பி அப்பட்டமாக ஏமாற்றும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

போலி இணையதளத்தில் (https://cbsegovt.com) மாணவர்களிடம் போர்டு தேர்வுகளில் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வதற்காக பதிவுக் கட்டணம் கேட்கப்படுகிறது. தேதித்தாள் மற்றும் நுழைவுச்சீட்டு உட்பட பலகைத் தேர்வுகள் தொடர்பான உண்மையான தகவல்களுக்கு மாணவர்கள் பார்வையிட வேண்டும்.

CBSE ஹால் டிக்கெட் பதிவிறக்கத்துக்கு நேரடியாக ஒருபோதும் பணம் கேட்பதில்லை. CBSE போர்டு தேர்வுகள் 2023க்கான உண்மையான தேதி அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.