India
நள்ளிரவில் கம்பளி போர்வையை திருடவந்த மருத்துவர்.. சுற்றிவளைத்து கைதுசெய்த போலிஸ்.. ராஜஸ்தானின் சோகம் !
ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூரில் தனியார் மருத்துவமனையில் சைலேந்திர குமார் என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு மாதம் ரூபாய் 40 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அதே மருத்துவமனையில் துப்புரவு ஊழியராக பணிபுரியும் ராகுல் வால்மீகி என்பவர் வைத்திருந்த கம்பளி சைலேந்திர குமாருக்கு பிடித்திருந்ததால் அது குறித்து கேட்டுள்ளார்.
அப்போது அந்த கம்பளியை தான் திருடிக்கொண்டு வந்ததாக ராகுல் கூறிய நிலையில், தனக்கும் அதேபோல ஒரு கம்பளி திருடித்தருமாறு மருத்துவர் சைலேந்திர குமார் கேட்டுள்ளார். மருத்துவர் கேட்டதால் அதற்கு ராகுலும் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதன்படி தனது நண்பர்கள் 3 பேரோடு இரவில் கம்பளி திருட சென்ற ராகுலோடு மருத்துவர் சைலேந்திர குமாரும் சென்றுள்ளார். அவர்கள் ஒரு இடத்தில் இருந்து கம்பளியை திருடிக்கொண்டிருக்கும்போது சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் கூச்சல் போட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் உள்ளிட்ட 4 பேரும் இருசக்கர வாகனத்தில் அங்கு இருந்து வேகமாக சென்றுள்ளனர். ஒரு கும்பல் இரவில் வேகமாக செல்வதை கண்ட ரோந்து போலிஸார் உடனே அவர்களை துரத்தி ஒரு இடத்தில அவர்களை சுற்றி வளைத்துள்ளனர்.
இதில் இருசக்கர வாகனத்தை விட்டு 3 பேர் தப்பித்த நிலையில், மருத்துவர் சைலேந்திர குமார் மட்டும் கோட் சூட் அணிந்த நிலையில் போலிஸாரிடம் சிக்கியுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கம்பளியை திருட வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை வேலையில் இருந்து நீக்கி தனியார் மருத்துவமனை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!