India
வெடித்து சிதறிய சிலிண்டர்.. 5 பேர் பரிதாப பலி- 49 பேர் கவலைக்கிடம்: ராஜஸ்தானில் துக்க வீடான திருமண வீடு!
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் அடுத்த புங்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர சிங். வாலிபரான இவருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதன்படி நேற்று திருமணத்திற்காக உறவினர்கள் சுரேந்திர சிங் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது, உறவினர்களுக்கு வீட்டில் சமையல் செய்யப்பட்டுள்ளது. அந்நேரம் திடீரென வீட்டின் ஸ்டோர் அறையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்துள்ளது. இதில் வீடு இடிந்து விழுந்துள்ளது.மேலும் தீ பற்றி எறிந்துள்ளது.
இந்த விபத்தில் ரத்தன் சிங், குஷ்பு என்ற இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 49 பேருக்குப் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் முதல்வர் அசோக் கெலாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என மருத்துவக்குழுவிற்கு முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !
-
பாலியல் வழக்கு : தொடர்ந்து எழும் புகார்... கர்நாடக முன்னாள் அமைச்சர் HD ரேவண்ணா அதிரடி கைது !
-
புகழ்பெற்ற மல்யுத்த வீரரை வீழ்த்திய வீராங்கனை... தோல்வியே சந்திக்காத இந்திய பெண்ணை கௌரவித்த Google!
-
இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !
-
பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி எதற்காக பாதுகாத்து வருகிறார்? : ராகுல் காந்தி கேள்வி!