India
முதியவரின் வயிற்றில் 187 நாணயங்கள்.. ஒன்றரை கிலோ எடை இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி !
சில மாதங்களுக்கு முன்னர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் வயிற்றிலிருந்து 62 ஸ்பூன்களை மருத்துவர்கள் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக வெளியே எடுத்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அதே போன்ற ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள லிங்சுகூரைச் சேர்ந்த 58 வயதான தியாமப்பா ஹரிஜன் என்பவர் வயிற்று வழியில் அவதிப்பட்டுள்ளார்.
இதனால் அவரின் உறவினர்கள் அவரை ஹங்கல் ஸ்ரீ குமரேஷ்வர் என்ற மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு எக்ஸ்ரே மற்றும் எண்டோஸ்கோபி மூலம் சோதனை செய்ததில் அவரின் வயிற்றில் ஏராளமான நாணயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் நாணயங்களை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி அறுவை சிகிச்சையில் அவரின் வயிற்றில் இருந்து 1, 2 மற்றும் 5 மதிப்புள்ள ஏராளமான நாணயங்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அத்னபின்னர் அந்த நபர் தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய மருத்துவர்கள், அவர் பல மாதங்களாக நாணயங்களை விழுங்கி வந்திருக்கலாம் என்றும், அவர் வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடைகொண்ட 187 நாணயங்கள் வெளியேற்றப்பட்டது என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!