India
வீடியோ எடுத்த இளைஞர்களை தாக்கிய செவிலியர்கள்.. வெளியான பதறவைக்கும் வீடியோ.. பீகாரில் அதிர்ச்சி !
பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டத்தில் சர்தார் மருத்துவமனை அமைந்துள்ளார். இங்கு மருத்துவச் சான்றிதழ் வாங்குவதற்காக இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். வந்தவர்கள் மருத்துவமனையை தாங்கள் கொண்டுவந்திருந்த செல்போனால் வீடியோ எடுத்துள்ளனர்.
அப்போது இதனைப் பாரத மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்களை பிடித்து தனி அறையில் அடைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பெண்களை வீடியோ எடுப்பதாக கூறி தாங்கள் வைத்திருந்த தடிமனான கம்பை வைத்து அந்த இளைஞர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், "உன் வீட்டுப் பெண்களை இப்படி வீடியோவாக எடுப்பியா" எனக் கூறிக்கொண்டே அந்த இளைஞர்களை மருத்துவமனையில் பணிபுரியும் பெண்கள் தாக்கியுள்ளனர்.
ஆனால் அந்த இளைஞர்களோ "மருத்துவமனையில் இருக்கும் குறைகளைத்தான் வீடியோவாக எடுத்தோம்" என பதிலளித்து அதனை ஏற்காத மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை தொடர்ந்து தாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து இளைஞர்களை தாக்கும் மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகவலைத்தளங்களில் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதோடு, சிலர் அந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!