India
வீடியோ எடுத்த இளைஞர்களை தாக்கிய செவிலியர்கள்.. வெளியான பதறவைக்கும் வீடியோ.. பீகாரில் அதிர்ச்சி !
பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டத்தில் சர்தார் மருத்துவமனை அமைந்துள்ளார். இங்கு மருத்துவச் சான்றிதழ் வாங்குவதற்காக இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். வந்தவர்கள் மருத்துவமனையை தாங்கள் கொண்டுவந்திருந்த செல்போனால் வீடியோ எடுத்துள்ளனர்.
அப்போது இதனைப் பாரத மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்களை பிடித்து தனி அறையில் அடைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பெண்களை வீடியோ எடுப்பதாக கூறி தாங்கள் வைத்திருந்த தடிமனான கம்பை வைத்து அந்த இளைஞர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், "உன் வீட்டுப் பெண்களை இப்படி வீடியோவாக எடுப்பியா" எனக் கூறிக்கொண்டே அந்த இளைஞர்களை மருத்துவமனையில் பணிபுரியும் பெண்கள் தாக்கியுள்ளனர்.
ஆனால் அந்த இளைஞர்களோ "மருத்துவமனையில் இருக்கும் குறைகளைத்தான் வீடியோவாக எடுத்தோம்" என பதிலளித்து அதனை ஏற்காத மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை தொடர்ந்து தாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து இளைஞர்களை தாக்கும் மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகவலைத்தளங்களில் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதோடு, சிலர் அந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!