India
ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டான ராணுவவீரரின் கால்.. டிக்கெட் பரிசோதகர் தலைமறைவு.. நடந்தது என்ன ?
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் சோனு குமார் சிங் (வயது 29). டெல்லியில் பணிசெய்யும் இவர் சொந்த ஊர் வந்துள்ளார். பின்னர் பணிக்கு செல்ல நேரம் வந்ததால் திப்ரூகர்-புது டெல்லி ராஜ்தானி ரயிலில் பயணம் செய்ய பரேலி ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.
பின்னர் ரயில் வந்ததும் அதில் சோனு குமார் ஏறி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த B6 பெட்டியில் ஏறியுள்ளார். அப்போது இருக்கை தொடர்பாக அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர் குபன் போரேவுக்கும் இவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட தருணத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர் குபன், ராணுவ வீரரை ரயிலை விட்டு கீழே தள்ளியுள்ளார். இதில் ரயில் சக்கரத்தில் ராணுவ வீரரின் கால் சிக்கியதில் அவரின் ஒரு கால் துண்டாகியுள்ளது.
உடனே ரயிலை நிறுத்தி அங்கிருந்தவர்கள் ராணுவ வீரரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு பரிசோதனை நடைபெற்றதால் மற்றொரு காலிலும் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரின் மற்றொரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலிஸார் தலைமறைவாக உள்ள ரயில் பரிசோதகரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!