India

கர்நாடகாவில் தொடரும் அதிர்ச்சி மரணங்கள்: தந்தை கண்முன்னே சுருண்டு விழுந்து உயிரிழந்த 2ம் வகுப்பு மாணவன்!

கர்நாடகா மாநிலம், கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் மோக்ஷித். இவர் அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற சிறுவன் மோஷித்துக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுவன் வகுப்பறையில் சோர்வாக இருந்துள்ளார். இதைப்பார்த்த வகுப்பு ஆசிரியர் இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர், தந்தை சந்திரசேகர் உடனே பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது சிறுவன் மோக்ஷித் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சந்திரகேசர் மகனை உடனே அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைகேட்டு தந்தை சந்திரசேகர் கதறி அழுதது மருத்துவமனையில் இருந்தவர்களின் நெஞ்சை கலங்க வைத்தது.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 2 மாணவிகள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். தற்போது 2ம் வகுப்பு மாணவனும் உயிரிழந்துள்ளதால் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 3 மாணவர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "இனி சினிமாவுல நடிக்க கூடாது.." - துணை நடிகையை கொடூரமாக கொன்ற கணவர்.. கைது செய்த திருப்பூர் போலிஸ் !