India
நாய்க்கு உணவு கொடுக்காததால் ஆத்திரம்.. உறவினரை அடித்து கொலை செய்த இளைஞர்: கேரளாவில் அதிர்ச்சி!
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் முளையன்காவு பகுதியைச் சேர்ந்தவர் ஹக்கீம். அவர் தனது வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். மேலும் ஹர்ஷத் என்ற உறவினர் இவரது வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், ஹர்ஷத், நாய்க்கு உணவு வழங்காமல் இருந்துள்ளார். இது அறிந்த ஹிக்கீம் தனது உறவினர் என்றும் பாராமல் அவரை மரக்கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் ஹர்ஷத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அங்குச் சிகிச்சை பலனின்றி ஹர்ஷத் உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த ஹர்ஷத் உடலில் பலத்த காயம் இருந்ததாக உடல்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஹக்கீமை கைது செய்துள்ளனர். மேலும் தாக்குதலில் ஹர்ஷத் விலா எலும்பு முறிந்து இரத்தபோக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்களும் போலிஸாரும் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி, கேழ்வரகு கொள்முதல் விலை உயர்வு:அமைச்சர் சக்கரபாணி - முழுவிவரம் உள்ளே!
-
சிவகங்கை இளைஞர்களுக்கு ஜாக்பாட்! மினி டைடல் பூங்காவை திறந்து வைத்த முதலமைச்சர்: முழுவிவரம் உள்ளே!
-
ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கையை மோடியும், ஆர்.என்.ரவியும் படிக்க வேண்டும் ; முதலமைச்சர் அட்வைஸ்!
-
ரூ.61.79 கோடியில் வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.13.36 கோடியில் 28 புதிய திட்டங்கள் : 15,453 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!