India
நாய்க்கு உணவு கொடுக்காததால் ஆத்திரம்.. உறவினரை அடித்து கொலை செய்த இளைஞர்: கேரளாவில் அதிர்ச்சி!
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் முளையன்காவு பகுதியைச் சேர்ந்தவர் ஹக்கீம். அவர் தனது வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். மேலும் ஹர்ஷத் என்ற உறவினர் இவரது வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், ஹர்ஷத், நாய்க்கு உணவு வழங்காமல் இருந்துள்ளார். இது அறிந்த ஹிக்கீம் தனது உறவினர் என்றும் பாராமல் அவரை மரக்கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் ஹர்ஷத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அங்குச் சிகிச்சை பலனின்றி ஹர்ஷத் உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த ஹர்ஷத் உடலில் பலத்த காயம் இருந்ததாக உடல்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஹக்கீமை கைது செய்துள்ளனர். மேலும் தாக்குதலில் ஹர்ஷத் விலா எலும்பு முறிந்து இரத்தபோக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்களும் போலிஸாரும் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!