India
20 மீட்டர் இழுத்துச் சென்ற கண்டெய்னர் லாரி.. பள்ளிக்கு சென்ற தந்தை - மகளுக்கு நேர்ந்த துயரம்!
கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் கோபகுமார். அவரது மகள் கவுரி. இவர் சாத்தனூரில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மகள் கவுரியை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் தந்தை கோபகுமார் அழைத்துச் சென்றுள்ளார். இவர்கள் மயிலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வேகமாக பின்னால் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி 20மீட்டர் வாகனத்தை இழுத்துச் சென்றது. இந்த விபத்தில் உடல் சிதறி தந்தையும், மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில், தந்தை மகள் வாகனத்தில் செல்லும் போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி அவர்கள் மீது மோதி இழுத்துச் செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது.
இதையடுத்து அந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி ஓட்டுநர் கவுரவ் குமாரைக் கைது செய்துள்ளனர். சாலை விபத்தில் தந்தை மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !