India
20 மீட்டர் இழுத்துச் சென்ற கண்டெய்னர் லாரி.. பள்ளிக்கு சென்ற தந்தை - மகளுக்கு நேர்ந்த துயரம்!
கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் கோபகுமார். அவரது மகள் கவுரி. இவர் சாத்தனூரில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மகள் கவுரியை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் தந்தை கோபகுமார் அழைத்துச் சென்றுள்ளார். இவர்கள் மயிலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வேகமாக பின்னால் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி 20மீட்டர் வாகனத்தை இழுத்துச் சென்றது. இந்த விபத்தில் உடல் சிதறி தந்தையும், மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில், தந்தை மகள் வாகனத்தில் செல்லும் போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி அவர்கள் மீது மோதி இழுத்துச் செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது.
இதையடுத்து அந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி ஓட்டுநர் கவுரவ் குமாரைக் கைது செய்துள்ளனர். சாலை விபத்தில் தந்தை மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!