India
LKG குழந்தைக்கு முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை.. பள்ளியின் கார் ஓட்டுநரை கைது செய்த தெலங்கானா போலிஸ்!
தெலங்கானா மாநிலம், பஞ்சாரா ஹில்ஸ் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இந்த பள்ளியில் படிக்கும் LKG குழந்தை ஒன்று சில நாட்களாகவே மன அழுத்தத்துடன் இருந்ததை அவரது பெற்றோர்கள் கவனித்துள்ளனர்.
பின்னர் இது பற்றி விசாரித்தபோது குழந்தை கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். சில நாட்களாகவே பள்ளியில் ஒருவர் தன்னை முத்தம் கொடுத்து தவறாக நடப்பதாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் சிறுமியை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது சிறுமி அந்த நபரை அடையாளம் காட்டியுள்ளார். அவர் பள்ளியின் தலைமை ஆசிரியரின் கார் ஓட்டுநர் ரஜினி குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் அவரை சரமாரியாக பள்ளியிலேயே தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து கார் ஓட்டுநரை கைது செய்தனர். மேலும் சிறுமியை ஆலோசனை மையத்திற்கு அனுப்பிவைத்தனர். மேலும் கார் ஓட்டுநர் இதேபோன்று வேறு சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளாரா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
Also Read
-
இணையவழி சூதாட்டத்தை விளம்பரப்படுத்துபவர்களுக்கு தமிழ்நாடு அரசு பகிரங்க எச்சரிக்கை... - முழு விவரம் !
-
தருமபுரியில் 30 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் : தமிழ்நாட்டில் தகிக்கும் கோடை வெப்பம் !
-
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் விவகாரம் : பிரிஜ் பூஷனின் மகனுக்கு சீட் கொடுத்த பாஜக - குவியும் கண்டனம்!
-
ஆந்திராவில் ரூ.2000 கோடி பணத்துடன் சிக்கிய கண்டெய்னர்கள்: இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி - விவரம் என்ன ?
-
போதை பொருள்வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை !