India
லிப்ட் கேட்டு காரில் ஏறிய இளம்பெண் பாலியல் பலாத்காரம் ! -உ.பி-யில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம் !
உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்புரின் ஜெய்சிங்பூர் பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 23 வயதான மாணவி ஒருவர் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வந்துள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கல்லூரி முடிந்து வீடு திரும்ப தாமதமாகியுள்ளது.
இதன் காரணமாக அந்த வழியே வந்த ஒரு காரில் லிப்ட் கேட்டு ஏறிச்சென்றுள்ளார். கார் சிறிது தூரம் சென்றநிலையில் காரை ஓட்டி வந்த நபர் காருக்குள் வைத்து அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி காரிலேயே மயக்கமடைந்துள்ளார். பின்னர் கார் ஓட்டுனர் அந்த பெண்ணை வழியில் இருந்த கால்வாயில் வீசிச்சென்றுள்ளார்.
சிறிது நேரத்துக்கு பின்னர் நினைவுக்கு வந்த அந்த மாணவி வீட்டுக்கு வந்து தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இது குறித்து போலிஸில் புகார் அளித்துள்ளனர்.
அதன்படி போலிஸார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Also Read
-
முகத்தை மறைத்து சென்ற பழனிசாமி: பத்திரிகையாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக.. Chennai Press Club கண்டனம்!
-
வக்பு சட்டத்திருத்தம் : “முழுமையான தடைக்கு அடுத்த கட்ட சட்டப் போராட்டங்கள் அவசியம் ஆகிறது” - முரசொலி!
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!