India
நள்ளிரவில் கண்விழித்து அதிர்ந்த பெண்கள்.. தங்கும் விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது நேர்ந்த அதிர்ச்சி !
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் காண்ட்வா மாவட்டத்துக்கு வேலை காரணமாக 35 மற்றும் 25 வயதுடைய இரண்டு பெண்கள் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த ஹோட்டலில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர்.
அப்போது நள்ளிரவில் இரண்டு பெண்களில் ஒருவர் எதேச்சையாக கண்விழித்துள்ளார். அப்போது தாங்கள் உறங்கிய கட்டிலில் இன்னொருவர் யாரோ உறங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அவர் ஒரு ஆண் என்பதை கண்டு அலறியுள்ளார்.
இதன் பின்னர் அந்த ஆண் உடனடியாக அந்த அறையில் இருந்து வெளியேறியுள்ளார். இதன் பின்னர் அந்த இரண்டு பெண்களும் இதுகுறித்து காவல்நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் சம்பவ இடத்துக்கு வந்து ஹோட்டலில் விசாரணை நடத்தியுள்ளனர்.
பின்னர் ஹோட்டலில் வேலை செய்யும் பணியாளர்களை வரிசையாக நிறுத்திவைத்து அந்த பெண்களை வைத்து அடையாளம் காண கூறியுள்ளனர். அப்போது அந்த பணியாளரின் ஒருவர்தான் தங்கள் அறைக்கு வந்தவர் என என அந்த பெண் அடையாளம் காட்டியுள்ளார்.
பின்னர் போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் பெயர் பலிராம் (வயது 22) என்பதும், பெண்கள் இருக்கும் அறையில் ஜன்னல் வழியாக நுழைந்ததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!