India
இனி நீரிலும் வானிலும் பயணிக்கலாம்.. சீனா உருவாக்கிய அட்டகாசமான விமானம் ! சிறப்பம்சம் என்ன ?
அறிவியல் நாளுக்கு நாள் எப்போதும் வளர்ந்தே வருகிறது. 100 வருடங்களுக்கு முன்னர் ஆகாய விமானங்கள் உலகம் முழுவதும் பிரபலான நிலையில், தற்போது நீரிலும் வானிலும் பயணிக்கும் திறன் படைத்த விமானங்கள் வரை உலகம் வளர்ச்சி கண்டுள்ளது.
சீனா நிறுவனம் விமானம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இந்த விமானம் நீரிலும் வானிலும் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு தன்னில் 12 டன் தண்ணீரை எடுத்துக்கொண்டு பயணிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
AG 600 M என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம், நீர்நிலைகளில் பயணிக்கும்போது 15 விநாடிகளில் 12 டன் தண்ணீரை உறிஞ்சும் திறன் கொண்டுள்ளது. காட்டுத்தீ, தீவிபத்து போன்ற பேரழிவு சூழ்நிலையில் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தான் உறிஞ்சியெடுக்கும் நீரினை சரியான இடத்தில் தெளித்து பேரழிவை இந்த விமானத்தால் தடுக்க முடியும் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 560 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த விமானம் உச்சபட்சமாக 20 ஆயிரம் உயரத்தில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!