India
மாநிலம் விட்டு மாநிலம் வந்து திருட்டு.. 20 ஆயிரம் மதிப்புடைய பொருளை 1000-க்கு விற்றதால் சிக்கிய திருடன் !
பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். 32 வயதுடைய இவர் சில பிரச்னை காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு சண்டிகர் மாநிலம் ராய்பூர் பகுதிக்கு இடம்பெயர்ந்தார். அங்கே ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், போதைக்கு அடிமையானதால் அந்த வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து பொழப்புக்கு என்ன செய்வதென்று யோசித்து வந்த இவர், அதற்காக சைக்கிள்களை திருட முடிவு செய்துள்ளார். அதன்படி ஹரியானா மாநிலத்திற்கு இடப்பெயர்ந்த இவர், உயர் ரக சைக்கிள்களை திருடி வந்துள்ளார்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கு ஏற்ப, இப்படி பல மாதங்களாக திருடி வந்த திருடன் தற்போது வசமாக காவல்துறையில் சிக்கியுள்ளார். அதாவது தொடர்ந்து உயர் ரக சைக்கிள்களை பார்த்து திருடி வந்த இவர், அதனை மிகவும் மலிவான விலைக்கு விற்று வந்துள்ளார். இதனால் ஒரு முறை சந்தேகமடைந்த நபர் ஒருவர் காவல்துறையில் தெரிவிக்கையில் அவர்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் ரவிக்குமாரை அடையாளம் கண்டனர்.
பிறகு அவர்கள் ரவிக்குமாரை சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சுமார் 62 சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர். அவைகளில் பல ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மதிப்புடையதாகும். அவைகளை ரவிக்குமார் வெறும் ரூ.2000 ஆயிரம், ரூ.1500-க்கு விற்று வந்துள்ளார்.
மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அங்குள்ள பஞ்ச்குலா என்ற பகுதியை சுற்றியிருக்கும் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன சைக்கிள்கள் அனைத்தும் ரவிக்குமார் திருடியதும், கடைசியாக கடந்த செப்டம்பர் 14-ம் தேதி செக்டார் 26 பகுதியில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சைக்கிளை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். உயர் ரக சைக்கிள்களை திருடி மலிவான விலையில் விற்று வந்த திருடனை புகார் எழுந்த நான்கு நாட்களில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
விஜயின் திடீர் கரூர் பயணம் எதற்காக? : உண்மையை உரக்கச் சொன்ன முரசொலி!
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!