India
மனைவியின் கையை துண்டாக வெட்டிய கொடூர கணவன்.. கேரளாவில் பகீர் சம்பவம்!
கேரள மாநிலம், எழாம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கு வித்யா என்ற பெண்ணுடன் ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து தம்பதிகள் ஒரு வருடம் மட்டுமே சேர்ந்த வாழ்ந்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் கணவனைப் பிரிந்த 5 வருடங்களாக மனைவி வித்யா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சனிக்கிழமையன்று இரவு மனைவியின் வீட்டிற்கு வந்த சந்தோஷ் திடீரென அவரை தாக்கியுள்ளார். மேலும் அவர் மறைத்து எடுத்து வந்த கத்தியை எடுத்து வித்தியாவின் இரண்டு கையையும் துண்டாக வெட்டியுள்ளார்.
இதைத் தடுக்க முயன்ற அவரது தந்தையையும் சந்தோஷ் தாக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் சந்தோஷ் தப்பிச் சென்றுள்ளார். பிறகு அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சந்தோஷை தேடிவந்தனர். பின்னர் அவரது செல்போன் சிக்னலை கொண்டு தலைமறைவாக இருந்து சந்தோஷை போலிஸார் கைது செய்துள்ளனர்.
Also Read
-
“‘முடிந்துவிட்டது’ என்றுதான் சொன்னேன், அது இன்றைக்கு பெரிய வைரலாகிவிட்டது!” : முதலமைச்சர் மு.க்.ஸ்டாலின்!
-
ரூ.6 கோடி மதிப்பீட்டில் ‘மதுரை ஒலிம்பிக் அகாடமி’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்குத் தமிழ்த்தாய் வாழ்த்தை உறுதி செய்த கரந்தை தமிழ்ச் சங்கம்!” : துணை முதல்வர் உதயநிதி உரை!
-
மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!
-
திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!