India
காவல்நிலையத்தில் அட்டகாசம் செய்த குரங்குகள்.. பாம்புகளை வைத்து தொல்லையை முடித்த போலிஸார்.. நடந்தது என்ன ?
கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள நெடும்கண்டத்தில் கேரள - தமிழ்நாடு எல்லையில் வனப்பகுதியை ஒட்டி கும்பம்மெட்டு காவல் நிலையம் அமைந்துள்ளது. சுற்றிலும் இருக்கும் குரங்குகள் இந்த காவல் நிலையத்தில் அடிக்கடி நுழைந்து பெரும் தொல்லை கொடுத்து வந்தன.
குரங்கு தொல்லையை சமாளிக்க போலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் குரங்கு தொல்லை குறைவதாக இல்லை. நாளுக்கு நாளுக்கு குரங்கு தொல்லை அதிகரித்த நிலையில், வேறு வழியின்றி உள்ளூர் எஸ்டேட் பராமரிப்பாளர் ஒருவரிடம் யோசனை கேட்டுள்ளனர்.
விலங்குகளை விரட்டுவதில் அனுபவம் வாய்ந்தவறான அந்த நபரும் இவர்களுக்கு உதவ ஒப்புக்கொண்டு ஒரு யோசனை கூறியுள்ளார். அதன்படி குரங்குகள் எப்போதுமே பாம்புகளை கண்டு அஞ்சும் தன்மை கொண்டது. பாம்பு செல்லும் வழியில் எந்த குரங்கும் வராது. ஆகவே பாம்பு பொம்மைகளை வாங்கி காவல்நிலையம் இருக்கும் பகுதியை சுற்றி கட்டுமாறு கூறியுள்ளார்.
அதன்படி போலிஸாரும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரப்பர் பாம்புகளை வாங்கி காவல்நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் கட்டியுள்ளனர். இந்த நிகழ்வுக்கு பின்னர் காவல்நிலைய பகுதிகளில் குரங்குகள் வருவது நின்றுவிட்டதாக போலிஸார் தரப்பின் தெரிவிக்கப்பட்டது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!