India
மாருதி நிறுவனத்தில் இருந்து இப்படி ஒரு காரா? மோசமான விபத்தில் இருந்து 5 பேரை பாதுகாத்த BREEZA !
கடந்த பல மாதங்களாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காராக விளங்கிவந்த டாடா நெக்ஸானை முந்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிறந்த விற்பனை எஸ்யூவியாக முதலிடத்திற்கு வந்தது.
இதற்கு காரணம் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் பாதுகாப்பானது எனவும், குடும்பத்தினருடன் பயணம் செய்ய ஏற்றது எனவும் கூறப்பட்டதே ஆகும். இந்த நிலையில், அதனை மெய்ப்பிக்கும் விதமாக நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.
சிம்லா நெடுஞ்சாலையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஒரு குடும்பத்தினர் பயணம் செய்து வந்துள்ளனர். அப்போது பிரெஸ்ஸா கார் சுமார் 50 கிலோ மீட்டர் வேகத்தில் எதிரே வந்துகொண்டிருந்த ட்ரக் ஒன்றின் மேல் மோதியுள்ளது.
இந்த விபத்தில், பிரெஸ்ஸா காரில் பயணம் செய்துகொண்டிருந்த கும்பத்தினரில் யாருக்கும் சிறிய அடி கூட படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் பாதுகாப்புகள் குறித்தும், விபத்தில் யாருக்கும் அடிபடாத நிகழ்வு குறித்தும் பல்வேறு தரப்பினர் கருத்து கூறி வருகின்றனர்.
Also Read
-
“விஸ்வகுரு, விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்” - மோடியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!
-
“பள்ளி விடுமுறை நாட்களில்தான் கூட்டம் கூட்டுவார்..” - விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி!
-
“இதையெல்லாம் 50 வருடங்களாக பார்த்துவிட்டேன்..” - அவதூறு பரப்புபவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக.. அண்ணா பிறந்தநாளில் அன்புக்கரங்கள் திட்டம் - தொடங்கி வைக்கிறார் முதல்வர்!
-
கிருஷ்ணகிரியில் 2 லட்ச பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.. வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!