India
மாருதி நிறுவனத்தில் இருந்து இப்படி ஒரு காரா? மோசமான விபத்தில் இருந்து 5 பேரை பாதுகாத்த BREEZA !
கடந்த பல மாதங்களாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காராக விளங்கிவந்த டாடா நெக்ஸானை முந்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிறந்த விற்பனை எஸ்யூவியாக முதலிடத்திற்கு வந்தது.
இதற்கு காரணம் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் பாதுகாப்பானது எனவும், குடும்பத்தினருடன் பயணம் செய்ய ஏற்றது எனவும் கூறப்பட்டதே ஆகும். இந்த நிலையில், அதனை மெய்ப்பிக்கும் விதமாக நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.
சிம்லா நெடுஞ்சாலையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஒரு குடும்பத்தினர் பயணம் செய்து வந்துள்ளனர். அப்போது பிரெஸ்ஸா கார் சுமார் 50 கிலோ மீட்டர் வேகத்தில் எதிரே வந்துகொண்டிருந்த ட்ரக் ஒன்றின் மேல் மோதியுள்ளது.
இந்த விபத்தில், பிரெஸ்ஸா காரில் பயணம் செய்துகொண்டிருந்த கும்பத்தினரில் யாருக்கும் சிறிய அடி கூட படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் பாதுகாப்புகள் குறித்தும், விபத்தில் யாருக்கும் அடிபடாத நிகழ்வு குறித்தும் பல்வேறு தரப்பினர் கருத்து கூறி வருகின்றனர்.
Also Read
-
“ஓடி ஒளியும் அவசியம் தி.மு.க.வினருக்கு என்றுமே கிடையாது!” : சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு!
-
வியட்நாமில் கவிழ்ந்த சுற்றுலாப் படகு.. 10 தமிழர்கள் பலி.. மகிழ்ச்சியான இடத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம்!
-
நெல்லையில் நடந்த கொடூரம்.. சுற்றி வளைத்த கும்பல்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த உடல்.. அச்சத்தில் மக்கள்!
-
“இனிமையும் இளமையும் மாறாத குரல்.. கானகோகிலம் எஸ்.ஜானகி மறைவு பேரிழப்பு” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
‘இசை உலகின் மகுடம் எஸ்.ஜானகி காலமானார்.. 17 மொழிகள்.. 40,000+ பாடல்கள்.. காலத்தால் அழியாத குரல்’