India
சிறிய தவறால் வீணாய் போன 20 வருட அனுபவம்.. ராஜநாகத்தால் பாம்பு மனிதருக்கு நேர்ந்த சோகம் !
ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் திவாரி (வயது 45) என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் தொழிலைச் செய்து வருகிறார். இதன் காரணமாக அந்த பகுதியில் மிகவும் பிரபலமானவராகவும் அவர் இருந்து வந்தார்.
இவருக்கு அந்த பகுதியில் இருக்கும் கொஹமெடி பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் மிக்பெரிய ராஜநாகம் ஒன்று புகுந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு சென்றவர் தனது அனுபவத்தின் வழியாக எளிதாக அந்த ராஜநாகத்தை பிடித்துள்ளார்.
பின்னர், அதனை தான் கொண்டுவந்த பைக்குள் அடைக்க வினோத் திவாரி முயன்றபோது எதிர்பாராத விதமாக ராஜநாகம் அவரை கடித்துள்ளது. இதன் காரணமாக விஷம் அதிவேகமாக பரவியதால் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
பாம்பு மனிதர் என்று அனைவராலும் பிரபலமாக அறியப்படும் வினோத் திவாரி பாம்பு கடித்து இறந்துள்ளது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்றும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மதப்பிளவை வளர்க்கும் மோடியின் வெறுப்பு பேச்சு! : 5 நாட்களில் 17 பொய்கள்!
-
வெள்ள நிவாரணம் : “தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல்” - ஒன்றிய பாஜக அரசுக்கு CPI கடும் கண்டனம்!
-
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !
-
காவி நிறமாக மாறிய DD லோகோ : சென்னையில் தூர்தர்ஷன் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.க. போராட்டம் !
-
தேர்தலுக்கு முன்பாக வெளியான ஆபாச வீடியோக்கள் : சர்ச்சையில் பாஜக கூட்டணி வேட்பாளர் - பரபரப்பான கர்நாடகா !