India
குடித்து விட்டு வகுப்பறைக்கு வந்த பெண் ஆசிரியர்.. மேஜையில் இருந்த மதுபாட்டில்கள்: கர்நாடகாவில் அதிர்ச்சி!
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கங்கலக்ஷ்மம்மா. இவர் கடந்த 5 ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையாகியுள்ளார்.
மேலும் குடித்து விட்டு மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வந்துள்ளார். இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அறிந்தும் சக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அவரை எச்சரித்துள்ளனர்.
ஆனால் அவர் தொடர்ந்து குடித்துவிட்டே பள்ளிக்கு வந்து சென்றுள்ளார். இதனால் இவர் மீது பெற்றோர்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்தனர்.
அப்போது ஆசிரியர் கங்கலக்ஷ்மம்மா மேஜையின் டிராயரை திறந்துபார்க்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர். பின்னர் திறந்துபார்ததபோது அதில் மது பாட்டில்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
Also Read
-
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி, கேழ்வரகு கொள்முதல் விலை உயர்வு:அமைச்சர் சக்கரபாணி - முழுவிவரம் உள்ளே!
-
சிவகங்கை இளைஞர்களுக்கு ஜாக்பாட்! மினி டைடல் பூங்காவை திறந்து வைத்த முதலமைச்சர்: முழுவிவரம் உள்ளே!
-
ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கையை மோடியும், ஆர்.என்.ரவியும் படிக்க வேண்டும் ; முதலமைச்சர் அட்வைஸ்!
-
ரூ.61.79 கோடியில் வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.13.36 கோடியில் 28 புதிய திட்டங்கள் : 15,453 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!