India
பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடும் வாலிபர்.. காரணம் என்ன?: போலிஸாரிடம் சிக்கவைத்த CCTV:
மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் பகுதியில் உள்ள வீடுகளில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் திருடப்படுவதாக போலிஸாருக்கு புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அதில், வாலிபர் ஒருவர் வீட்டில் துவைத்துக் காயவைத்துள்ள பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த வாலிபர் உள்ளூரைச் சேர்ந்த ஒருவராக இருக்க வாய்ப்புள்ளதாக போலிஸார் சந்தேகித்துள்ளனர்.
மேலும் ஏன் அந்த நபர் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடிச் செல்கிறார் என்பது தெரியவில்லை என போலிஸார் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடும் வாலிபரை போலிஸார் தேடி வருவது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!