India
பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடும் வாலிபர்.. காரணம் என்ன?: போலிஸாரிடம் சிக்கவைத்த CCTV:
மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் பகுதியில் உள்ள வீடுகளில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் திருடப்படுவதாக போலிஸாருக்கு புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அதில், வாலிபர் ஒருவர் வீட்டில் துவைத்துக் காயவைத்துள்ள பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த வாலிபர் உள்ளூரைச் சேர்ந்த ஒருவராக இருக்க வாய்ப்புள்ளதாக போலிஸார் சந்தேகித்துள்ளனர்.
மேலும் ஏன் அந்த நபர் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடிச் செல்கிறார் என்பது தெரியவில்லை என போலிஸார் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடும் வாலிபரை போலிஸார் தேடி வருவது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!