India
4 காவலாளிகள் கொடூர கொலை.. KGF படத்தை பார்த்து கேங்ஸ்டராக நினைத்த 19 வயது இளைஞன்: ம.பி-யில் பகீர் சம்பவம்!
மத்திய பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் கடந்த 5 நாட்களில் 4 காவலாளிகள் தூங்கிக் கொண்டிருக்கும் போது கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலைகளை யார் செய்தது என போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கு போலிஸாருக்கு சிக்கலாக இருந்து வந்தது.
இந்நிலையில், அந்த மர்ம கொலையாளி 5 ஆவதாக ஒரு காவலாளியைக் கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கூறிய கொலையாளியின் அடையாளங்களை வைத்து போலிஸார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், 4 காவலாளிகளை கொலை செய்தது சாகர் பகுதியைச் சேர்ந்த 19 வயது சிவபிரசாத் துருவ் என்ற இளைஞர்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
KGF படத்தில் வரும் ராக்கி பாய் கதாபாத்திரம் போன்று பெரிய கேங்ஸ்டாராக நினைத்து இந்த கொலைகளைச் செய்ததாக போலிஸாரிடம் சிவபிரசாத் துருவ் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் தனியாகத் தூங்கிக் கொண்டிருக்கும் காவலாளிகளை குறிவைத்து கொலை செய்து வந்ததையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து போலிஸார் மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 5 நாட்களில் 4 காவலாளிகள் தூங்கிக் கொண்டிருக்கும் போது கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
- 
	    
	      
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
 - 
	    
	      
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
 - 
	    
	      
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
 - 
	    
	      
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!
 - 
	    
	      
“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!