India
திறக்க முடியாத ஆம்புலன்ஸ் கதவு..கோடாரியால் உடைத்து திறந்த பொதுமக்கள் ..உள்ளே இருந்தவருக்கு நடந்த சோகம்!
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் கோயமோன் (வயது 66 ). இவர் அங்குள்ள உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த அவரை அங்குள்ளவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் ஆம்புலன்சில் அவர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அங்கு சென்றதும் அவரை அழைத்துவந்த ஆம்புலன்சில் கதவுகள் திறக்க முடியாத அளவு சிக்கிக்கொண்டுள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட அங்கிருந்த பொது மக்கள் ஆம்புலன்சில் கதவை திறக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர்.
பின்னர் 30 நிமிடம் போராடி அங்கிருந்த கோடாரியின் உதவிகொண்டு அந்த ஆம்புலன்ஸ் கதவு உடைக்கப்பட்டுள்ளது. பின்னர் அதன்பின் இருந்த கோயமோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த தகவல் வெளிவரவே அரசு மருத்துவ மனையில் உள்ள வாகனங்களை ஆய்வு செய்து முறையான பராமரிப்பில் வைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!