India
COLLECTOR கண்ணாடியை ஆட்டைய போட்ட குரங்கு.. களத்தில் இறங்கிய 20 பேர் கொண்ட குழு.. உ.பி-யில் அதிர்ச்சி !
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் மாவட்ட ஆட்சியராக (COLLECTOR) இருப்பவர் நவ்நீத் சாஹல். இவர் நேற்று அம்மாவட்டத்திலுள்ள பிருந்தாவனம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த குரங்கு ஒன்று ஆட்சியர் கையில் வைத்திருந்த கண்ணாடியை பிடிங்கி சென்றுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்சியர், காவல்துறையினர் என அனைவரும் அந்த குரங்கிடம் இருந்து கண்ணாடியை மீட்க அரும்பாடு பட்டனர். இதற்காக சுமார் 20 பேர் கொண்ட குழு குரங்கிடம் இருந்து ஆட்சியரின் கண்ணாடியை திரும்பி வாங்க வழியை தேடிக்கொண்டிருந்தது.
இருப்பினும் அந்த குரங்கு அவரது கண்ணாடியை கொடுக்காமல் ஒரு படிக்கட்டின் மேல் ஏறிக்கொண்டு தனது கையிலேயே வைத்துக்கொண்டிருந்தது.
இதையடுத்து உள்ளூர்வாசிகள் உதவியுடன், அந்த குரங்கிடம் இருந்து கண்ணாடியை மீட்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
Also Read
-
தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! சிலிண்டரும் இல்லை! - தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!