India
COLLECTOR கண்ணாடியை ஆட்டைய போட்ட குரங்கு.. களத்தில் இறங்கிய 20 பேர் கொண்ட குழு.. உ.பி-யில் அதிர்ச்சி !
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் மாவட்ட ஆட்சியராக (COLLECTOR) இருப்பவர் நவ்நீத் சாஹல். இவர் நேற்று அம்மாவட்டத்திலுள்ள பிருந்தாவனம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த குரங்கு ஒன்று ஆட்சியர் கையில் வைத்திருந்த கண்ணாடியை பிடிங்கி சென்றுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்சியர், காவல்துறையினர் என அனைவரும் அந்த குரங்கிடம் இருந்து கண்ணாடியை மீட்க அரும்பாடு பட்டனர். இதற்காக சுமார் 20 பேர் கொண்ட குழு குரங்கிடம் இருந்து ஆட்சியரின் கண்ணாடியை திரும்பி வாங்க வழியை தேடிக்கொண்டிருந்தது.
இருப்பினும் அந்த குரங்கு அவரது கண்ணாடியை கொடுக்காமல் ஒரு படிக்கட்டின் மேல் ஏறிக்கொண்டு தனது கையிலேயே வைத்துக்கொண்டிருந்தது.
இதையடுத்து உள்ளூர்வாசிகள் உதவியுடன், அந்த குரங்கிடம் இருந்து கண்ணாடியை மீட்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!