India
இனி Gpay, Phonepe போன்ற சேவைகளுக்கும் கட்டணம்? .. RBI முடிவால் பொதுமக்கள் அதிர்ச்சி!
உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகமானதை அடுத்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாதாரண மளிகைக் கடைமுதல் வங்கிகள் வரை என அனைத்தும் Gpay, Phonepe போன்ற செயலிகள் மூலம் பணத்தைச் செலுத்தி வருகின்றனர்.
இப்படிப் பணம் செலுத்துவதற்கு இதுவரை கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் கலந்து விட்டன Gpay, Phonepe போன்ற சேவைகள்.
இந்நிலையில் Gpay, Phonepe பணப் பரிவர்த்தனை செயலிகளுக்குக் கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளைப் பங்குதாரர்களிடம் ஆலோசனையும் கேட்டுள்ளது.
இதையடுத்து ATMல் நமது சேமிப்பு பணத்தை எடுத்தால் அதற்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதைப் போன்று Gpay, Phonepe போன்ற செயலிகளைப் பயன்படுத்தி பணம் அனுப்புவதற்கும் கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Sticker தொடங்கி ஸ்ரீவைகுண்டம் பாலியல் விவகாரம் வரை.. பேரவையில் விஜய் ஆட்சியை வறுத்தெடுத்த LoP உதயநிதி!
-
“தமிழ்நாட்டின் உரிமையை வலுவாக்கவே புதிய நடுவர் மன்றம்!” : தங்கம் தென்னரசு விளக்கம்!
-
மின்துறையை நடத்துவது எப்படி?: த.வெ.க அமைச்சருக்கு பேரவையில் பாடம் எடுத்த செந்தில் பாலாஜி, சிவசங்கர்!
-
“மேயர் பிரியா மீது அவதூறு.. Protocol-ஐ தெரிந்து கொள்ளுங்கள்.. MLA பல்லவிக்கு சபாநாயகர் கொடுத்த பதிலடி”
-
அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் : பேரவையில் தி.மு.க வலியுறுத்தல்!