India
நடுரோட்டில் அமர்ந்து மது குடித்த Instagram பிரபலம் : காப்பு மாட்டிய காவல்துறை!
உத்தரகாண்ட மாநிலத்தைச் சேர்ந்தவர் பாபி கட்டாரியா. இவர் Instagram பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு வருகிறார். இவரது Instagram பக்கத்தில் இவர் வெளியிடும் வீடியோக்கள் எப்போதும் சர்ச்சை ஏற்படுத்தும் விதமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக டேராடூனில் நடுரோட்டு நாற்காலி போட்டு அமர்ந்து மது குடிப்பது போன்று ஒரு வீடியோவை தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து போலிஸார் பாபி கட்டாரியாவை கைது செய்துள்ளனர். மேலும் இவர் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் சிகரெட் பற்றவைப்பது போன்ற வீடியோவும் இணையத்தில் வைரலானது. இது குறித்து போலிஸார், இது பழைய வீடியோ எனவும், இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் விமானத்தில் சிகரெட் பிடிக்கும் வீடியோ குறித்தும் பாபி கட்டாரியா மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடுரோட்டில் அமர்ந்து Instagram பிரபலம் பாபி கட்டாரியா மது குடித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!