India
எச்சரிக்கையை மீறி சாகசம்.. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கார்.. 3 இளைஞர்கள் பலி ! நடந்தது என்ன?
ஆந்திரா மாநிலம் கர்னூலை சேர்ந்த நான்கு கல்லூரி மாணவர்கள் கார் ஒன்றில் அங்குள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் பயணித்த கார்நந்தியாலா மாவட்டத்திலுள்ள ராயப்பாடு அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது ஜக்துர் என்ற பகுதியில் இவர்கள் சென்ற சாலையில் காட்டாற்றின் மேல் பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் காட்டாற்றில் வெள்ளம் அதிகம் வந்துள்ளது. இதனால் பாலத்தில் செல்ல வேண்டாம் என அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் அந்த எச்சரிக்கையை மீறி அந்த இளைஞர்கள் காரில் அந்த காட்டாற்றை தாண்டியுள்ளனர். வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டது.
இதனை கவனித்த அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் குதித்து அவர்களை மீட்க முயன்றனர்.காரின் கண்ணாடியை உடைத்து 3 பேர் உயிரோடு மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலிஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!