India
பெண்ணை ஆபாசமாக மிரட்டிய பாஜக நிர்வாகி.. தரைமட்டமான வீடு.. - உ.பி-யில் நடந்தது என்ன ?
உத்தர பிரதேச மாநிலம், நொய்டா பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த் தியாகி. இவர் பா.ஜ.க-வின் கிசான் மோர்ச்சா சங்கத்தின் உறுப்பினராகவும், யுவ சமிதியின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
இந்த நிலையில், ஸ்ரீகாந்த் தியாகி, தனது குடியிருப்பில் உள்ள ஒரு இடத்தை ஆக்கிரமித்து அங்கு செடிகளை வைத்துள்ளார். இதைப்பார்த்த அதே குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் இது விதிமீறலாக இருப்பதாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் இருவருக்குமிடையே மோதலாக வெடித்தது.
மேலும் ஸ்ரீகாந்த் தியாகி அந்த பெண்ணை பற்றி ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளார். அதோடு அந்த பெண்ணை இவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீகாந்த் தியாகி அந்த பெண்ணை மிரட்டும் வீடியோ அண்மையில் இணையத்தில் வைரலானது. இதையடுத்து இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம், ஸ்ரீகாந்த் தியாகியைக் கைதுசெய்யக்கோரி கண்டனம் தெரிவித்தது.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது பா.ஜ.க, பிரமுகரான ஸ்ரீகாந்த் தியாகிக்கு நொய்டாவில் இருக்கும் சொந்தமான சட்டவிரோத கட்டடங்களை உத்தரபிரதேச காவல்துறையினர் புல்டோசர் கொண்டு இடித்துள்ளது.
அதோடு, ஸ்ரீகாந்த் தியாகியின் ஆதரவாளர்களையும் கைதுசெய்த காவல்துறையினர், அவர்கள் மீது வழக்கு பதிவும் செய்துள்ளது. இதனிடையே ஸ்ரீகாந்த் தியாகி தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது ஸ்ரீகாந்த் தியாகி கட்டடம் புல்டோசரால் இடித்துத் தள்ளப்படும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !