India
சரக்கு ரயில் இன்ஜினில் சிக்கிய இளைஞர்.. 5 கி.மீ தரதரவென இழுத்து சென்ற அவலம் ! - அடுத்து நடந்தது என்ன ?
உத்தர பிரதேச மாநிலம் துமாய் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அஜீத் குமார் லோதி (வயது 18). இவர் நேற்று டெல்லி-ஹவுரா இரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு இரயில் ஒன்றின் இன்ஜினில் சிக்கியுள்ளார். சிக்கிய இவரை, அந்த இரயில் சுமார் 5 கிலோ மீட்டர் வரை இழுத்து சென்றுள்ளது.
இதையடுத்து இளைஞர் சிக்கியதை அறிந்த இரயில் ஓட்டுநர் வண்டியை உடனடியாக நிறுத்தியுள்ளார். பின்னர் இறங்கி வந்து பார்க்கையில் இளைஞரின் உடல் சிதைந்த நிலையில் இருந்தது. இதைக்கண்டு அதிச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக இரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அந்த இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அந்த இளைஞர் தவறுதலாக இன்ஜினில் சிக்கினாரா ? அல்லது தற்கொலை செய்துள்ளாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”
-
ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!
-
”இந்திய இளைஞர்கள் உருவாக்கிய ’காக்ரோச் ஜனதா கட்சி’ - CJP.. அதிரவைக்கும் காரணங்கள்” - முழு விவரம் அறிக!
-
மீண்டும் ‘வந்தே மாதரம்’ முதலில்... தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளிய தவெக அரசு : குவியும் கண்டனம்!