India
சரக்கு ரயில் இன்ஜினில் சிக்கிய இளைஞர்.. 5 கி.மீ தரதரவென இழுத்து சென்ற அவலம் ! - அடுத்து நடந்தது என்ன ?
உத்தர பிரதேச மாநிலம் துமாய் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அஜீத் குமார் லோதி (வயது 18). இவர் நேற்று டெல்லி-ஹவுரா இரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு இரயில் ஒன்றின் இன்ஜினில் சிக்கியுள்ளார். சிக்கிய இவரை, அந்த இரயில் சுமார் 5 கிலோ மீட்டர் வரை இழுத்து சென்றுள்ளது.
இதையடுத்து இளைஞர் சிக்கியதை அறிந்த இரயில் ஓட்டுநர் வண்டியை உடனடியாக நிறுத்தியுள்ளார். பின்னர் இறங்கி வந்து பார்க்கையில் இளைஞரின் உடல் சிதைந்த நிலையில் இருந்தது. இதைக்கண்டு அதிச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக இரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அந்த இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அந்த இளைஞர் தவறுதலாக இன்ஜினில் சிக்கினாரா ? அல்லது தற்கொலை செய்துள்ளாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!