India
“2 செயற்கைக்கோள்களின் சிக்னல் திடீர் துண்டிப்பு” - SSLV ராக்கெட் நிலை தெரியாததால் அதிகாரிகள் அதிர்ச்சி !
இந்திய விண்வெணி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்தது. எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படுகிறது.
இதற்கான கவுனட்டவுன் இன்று காலை 2.26 மணிக்கு துவங்கிய நிலையில் இன்று காலையில் சுமார் 9.18 மணிக்கு ராக்கெட் ஏவப்படுகிறது. இந்த எஸ்.எஸ்.எல்.வி- டி1 ராக்கெட்டில் இ.ஓ.எஸ் 02, ஆசாதிசாட் என்கிற இரண்டு எடை குறைந்த செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது.
எடை குறைந்த சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது 120 டன் எடை கொண்ட இந்த ராக்கெட் 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்வது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு செயற்கைக்கோள்களின் சிக்னல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. மேலும் செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல்களைப் பெற தீவிரமாக முயற்சித்து வருகிறோம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!