India
“2 செயற்கைக்கோள்களின் சிக்னல் திடீர் துண்டிப்பு” - SSLV ராக்கெட் நிலை தெரியாததால் அதிகாரிகள் அதிர்ச்சி !
இந்திய விண்வெணி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்தது. எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படுகிறது.
இதற்கான கவுனட்டவுன் இன்று காலை 2.26 மணிக்கு துவங்கிய நிலையில் இன்று காலையில் சுமார் 9.18 மணிக்கு ராக்கெட் ஏவப்படுகிறது. இந்த எஸ்.எஸ்.எல்.வி- டி1 ராக்கெட்டில் இ.ஓ.எஸ் 02, ஆசாதிசாட் என்கிற இரண்டு எடை குறைந்த செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது.
எடை குறைந்த சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது 120 டன் எடை கொண்ட இந்த ராக்கெட் 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்வது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு செயற்கைக்கோள்களின் சிக்னல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. மேலும் செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல்களைப் பெற தீவிரமாக முயற்சித்து வருகிறோம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
நீதித்துறை குறித்த அமித்ஷாவின் சர்ச்சை கருத்து.... பொங்கி எழுந்த 18 முன்னாள் நீதிபதிகள்... விவரம் என்ன ?
-
“மக்களுக்கான திட்டங்களை சீர்குலைக்கும் ஒன்றிய பாஜக அரசு!” : TOI நாளிதழுக்கு முதலமைச்சர் சிறப்பு கட்டுரை!
-
சென்னையில் நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் : சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு !
-
“அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற முழு மூச்சுடன் பாடுபடுவேன்!” : சென்னையில் நீதியரசர் சுதர்சன் உறுதி!
-
எடப்பாடி பழனிசாமியின் மிரட்டல் எதிரொலி... ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்க முயன்ற அதிமுகவினர் !