India
மாணவர்களை பகுதிநேர கூலி தொழிலாளிகளாக்கிய அரசு பள்ளி.. வெளிவந்த வடமாநில அரசு பள்ளிகளின் அவலம் !
பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளி மாணவர்களை பாதி நேரம் மண் தோண்டுதல், செங்கற்கள் எடுத்து வருதல், மரம் வெட்டுதல் போன்ற வேலைகளை செய்ய வைப்பதாக குற்றசாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது.
இந்த நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கூலிவேலைகளை பள்ளியில் படிக்கும் குழந்தைகள் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் வகையில், நடைபெற்ற இந்த சம்பவத்தை பலரும் இணையத்தில் கண்டித்து வருகின்றனர். மேலும் சம்மந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் ஜெகனாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் முன் வந்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியின் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், இந்த சம்பவம் இதற்கு முன்னரும் நடந்துள்ளது என்றும், இப்போதுதான் அது வெளிவந்துள்ளது என்றும் கூறினார். மேலும், பள்ளியில் பராமரிப்பு மிகவும் மோசமாக இருப்பதாகவும், வருகை மிகக் குறைவாக இருப்பதாகவும் கூறினார்.
மேலும், பள்ளியில் கரும்பலகைகள் உடைக்கப்பட்டுள்ளன. தயாரிக்கப்படும் மதிய உணவுகளும் நன்றாக இல்லை என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 149 கிலோ போதைப்பொருள் : சீல் வைக்கப்பட்ட தயாரிப்பு ஆலை !
-
இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமான காசா: கட்டட கழிவுகளை அகற்ற 14 ஆண்டுகள் தேவைப்படும் - ஐ.நா தகவல் !
-
மதப்பிளவை வளர்க்கும் மோடியின் வெறுப்பு பேச்சு! : 5 நாட்களில் 17 பொய்கள்!
-
வெள்ள நிவாரணம் : “தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல்” - ஒன்றிய பாஜக அரசுக்கு CPI கடும் கண்டனம்!
-
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !