India
காட்டுப்பகுதியில் 18 வயது இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: உ.பி-யில் தொடரும் கொடூரம்!
உத்தர பிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் இயற்கை உபாதைக்காகத் தனது கிராமத்திற்கு வெளியே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, அதேகிராமத்தைச் சேர்ந்த 4 வாலிபர்கள் அந்த பெண்ணை கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் சென்றுள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் நடந்தவை குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வன்கொடுமை செய்த 4 பேரையும் அடையாளம் கண்டு, தலைமறைவாக உள்ள அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அக்கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமையில் பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேச மாநிலம்தான் முதலிடத்தில் உள்ளது. மேலும் போக்சோ வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களிலும் உத்தர பிரதேசம் தான் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!