India
காட்டுப்பகுதியில் 18 வயது இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: உ.பி-யில் தொடரும் கொடூரம்!
உத்தர பிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் இயற்கை உபாதைக்காகத் தனது கிராமத்திற்கு வெளியே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, அதேகிராமத்தைச் சேர்ந்த 4 வாலிபர்கள் அந்த பெண்ணை கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் சென்றுள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் நடந்தவை குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வன்கொடுமை செய்த 4 பேரையும் அடையாளம் கண்டு, தலைமறைவாக உள்ள அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அக்கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமையில் பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேச மாநிலம்தான் முதலிடத்தில் உள்ளது. மேலும் போக்சோ வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களிலும் உத்தர பிரதேசம் தான் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?