India
சாக்லேட் வாங்கி கொடுத்து சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் : சிக்கிய தாளாளரின் மகன் - அதிர்ச்சி சம்பவம் !
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தாளாளர் யாசிர், பள்ளியின் சில முக்கிய வேலைகளை கவனித்து வந்துள்ளார். மேலும் அந்த பள்ளியில் படிக்கும் சிறுமிகளிடம் நன்றாக பேசி, அடிக்கடி சாக்லேட், பிஸ்கட், கேக் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கி கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இப்படியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, சாக்லேட் வாங்கி கொடுத்து மாடியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்றுள்ளார். தாளாளரின் மகன் என்ற நம்பிக்கையில் அந்த மாணவியும் சென்றுள்ளார். ஆனால், அங்கே அந்த மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
இதையடுத்து மாணவி வீட்டிற்கு வந்ததும் நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கதறி அழுதுகொண்டே தெரிவித்துள்ளார். மாணவி கூறியதை கேட்டதும் துடித்து போன பெற்றோர்கள், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பள்ளியில் படிக்கும் பல சிறுமிகளிடம் இதுபோன்று பாலியல் அத்துமீறலில் தாளாளரின் மகன் ஈடுபட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாட்டிய தயாநிதி மாறன் MP!