India
சாக்லேட் வாங்கி கொடுத்து சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் : சிக்கிய தாளாளரின் மகன் - அதிர்ச்சி சம்பவம் !
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தாளாளர் யாசிர், பள்ளியின் சில முக்கிய வேலைகளை கவனித்து வந்துள்ளார். மேலும் அந்த பள்ளியில் படிக்கும் சிறுமிகளிடம் நன்றாக பேசி, அடிக்கடி சாக்லேட், பிஸ்கட், கேக் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கி கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இப்படியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, சாக்லேட் வாங்கி கொடுத்து மாடியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்றுள்ளார். தாளாளரின் மகன் என்ற நம்பிக்கையில் அந்த மாணவியும் சென்றுள்ளார். ஆனால், அங்கே அந்த மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
இதையடுத்து மாணவி வீட்டிற்கு வந்ததும் நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கதறி அழுதுகொண்டே தெரிவித்துள்ளார். மாணவி கூறியதை கேட்டதும் துடித்து போன பெற்றோர்கள், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பள்ளியில் படிக்கும் பல சிறுமிகளிடம் இதுபோன்று பாலியல் அத்துமீறலில் தாளாளரின் மகன் ஈடுபட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ் திரையுலகத்தில் நீங்கா துயரம்... பல தலைமுறைகளுக்கான சினிமா பல்கலைக்கழகம் கே.பாக்யராஜ் !
-
தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜ் சாரின் புகழ் நிலைத்திருக்கும் : உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!
-
“ஒளிந்திருந்த பூனை வெளியே வந்துவிட்டது” : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புக்கு அன்பில் மகேஷ் கண்டனம்!
-
“தமது படைப்புகளால் தொடர்ந்து வாழ்வார்” - ‘பாக்யராஜ் 50’ விழாவை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் உருக்கம்!
-
“மின் துறை வெள்ளை அறிக்கையா அது நொள்ளை அறிக்கை.. குற்றம் சொல்லி காலத்தை கடத்தாதீர்கள்” : முரசொலி காட்டம்!