India
நின்றிருந்த பேருந்து மீது அதிவேகமாக மோதிய சொகுசு பேருந்து: கோர விபத்தில் 8 பேர் பலி - 3 பேர் கவலைக்கிடம்!
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் இன்று காலை சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நரேந்திரபூர் மதராஹா என்ற கிராமம் அருகே பயணிகளுடன் நின்று கொண்டிருந்த மற்றொரு சொகுசு பேருந்து மீது, சென்று கொண்டிருந்த பேருந்து மோதியது.
இந்த மோதலில் பேருந்தில் இருந்த பயணிகளில் 8 பேர் பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 16 பேருக்கு பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்தை பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பினர். அதோடு காயம் அடைந்தவர்களை பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் விசாரிக்கையில், இரண்டு பேருந்துகளும் பீகாரில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது.
மேலும் இந்த கோர விபத்து குறித்து காவல் அதிகாரி கூறுகையில், இந்த பேருந்தின் ஓட்டுநர், தனது கட்டுப்பாட்டை இழந்ததால், இந்த விபத்து நேர்ந்ததாகவும், லக்னோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறினார்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?