India
இந்தியாவில் கண்டறியப்பட்ட பன்றி காய்ச்சல்.. 300 பன்றிகளை கொல்ல மாநில அரசு முடிவு!
கொரோனாவுக்கு பின்னர் உலக நாடுகளை அச்சுறுத்தும் நோயாக குரங்கு அம்மை பாதிப்பு இருந்து வருகிறது. பல நாடுகளில் பரவியுள்ள இந்த நோயை உலக அவசர நிலையாக ஐ.நா அறிவித்தது.
அதைத் தொடர்ந்து இந்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு சோதனையை தீவிரப்படுத்திய நிலையில், இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய் பரவியது. வெளிநாடுகளுக்கு செல்லாத டெல்லி வாசி ஒருவருக்கு குரங்கு அம்மை பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் உள்ள பண்ணை ஒன்றில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆபத்தான வைரஸ் நோயாக கருதப்படும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் வளர்ப்பு பன்றிகளை தாக்கும் ஆபத்தான நோயாக பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள ஆனந்தவாடி என்ற ஊரில் உள்ள பன்றி வளர்க்கும் பண்ணைகளில் பன்றிகள் சில உயிரிழந்துள்ளன. இதைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் இறந்த பன்றிகளின் மாதிரிகளை பரிசோதனைக்காக சேகரித்துள்ளனர்.
பின் அவற்றை திருவனந்தபுரம் அரசு ஆய்வகத்திற்கும் கோபாலில் உள்ள உயர் விலங்கு தேசிய நிறுவனத்திற்கும் அனுப்பியுள்ளனர். சோதனை முடிவுகளின் அடிப்படையில் அங்குள்ள இரண்டு பண்ணைகளில் உள்ள பல பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது
இதன் பின்னர் அந்த பண்ணைகளில் இருந்த சுமார் 360க்கும் மேற்பட்ட பன்றிகளை கொல்ல மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்லப்பட்ட பன்றிகளை மிக ஆழத்தில் புதைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!