India
“பண்ணை வீட்டில் பாலியல் தொழிலுக்கு விடுதி நடத்தி வந்த பா.ஜ.க தலைவர்..” -மேகாலயாவில் அதிர்ச்சி !
மேகாலயா மாநில பா.ஜ.க.வின் துணைத் தலைவராக இருப்பவர் பெர்னார்டு என். மராக் ரிம்பு. இவருக்கு மேற்கு கரோ என்ற மலைப்பகுதியில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் அவ்வபோது ஆண்கள் மற்றும் இளம் பெண்களின் வருகையும் அதிகரித்துள்ளதாகவும், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை கட்டாயப்படுத்தி அழைத்து வருவதாகவும் அம்மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
முதலில் பா.ஜ.க முக்கிய நிர்வாகிகளில் வீடு என்பதால் போலிஸார் தயக்கம் காட்டியதாக கூறப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்றைய தினம் மராக் ரிம்பு பண்ணை வீட்டில், தனிப்படை போலிஸார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையில் வீட்டில் இருந்த 4 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி என 5 பேரை மீட்ட போலிஸார் அவர்களை குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் பண்ணை வீட்டை பூட்டில் சீல் வைத்தனர். மேலும் குழந்தைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தவர்கள் உட்பட 73 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுதொடர்பாக போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பண்ணை வீட்டில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் கட்டிட வடிவமைப்பை பார்க்கும் போது, மராக் ரிம்பு மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் தொழில் செய்வற்காகவே விடுதி போல நடத்தி வந்துள்ளது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி, மதுபான பாட்டில், ஆயுதம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!