India
"தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் இல்லை, நிதி ஒதுக்கீடும் இல்லை" -ஒன்றிய அரசின் பதிலால் அதிர்ச்சி !
மத்தியில் பா,ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து பா.ஜ.க ஆளாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுகிறது. அதிலும் குறிப்பாக தெற்கு மாநிலங்களில் இருந்து அதிக வரியை வசூல் செய்யும் ஒன்றிய அரசு அந்த மாநிலங்களுக்கு குறைவாக தொகையையே திரும்பி கொடுக்கிறது.
ஆனால், அதே நேரம் வடமாநிலங்களுக்கு குறைந்த வரி தொகையை பெற்று அதிக தொகையை திருப்ப கொடுக்கிறது. கூட்டாச்சியின் பெயரில் இதை அனுமதித்தாலும் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய gst இழப்பீட்டு தொகையை வழங்குவதை கூட பா.ஜ.க அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
அதுவும் பா.ஜ.கவை அனுமதிக்காத தமிழ்நாட்டை பா.ஜ.க அரசு தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது. ரயில்வே துறையில் இருந்து நிதி ஒதுக்குவது வரை அனைத்திலும் இந்த பாகுபாடு தொடர்ந்து வருகிறது. இது போன்ற நிகழ்வு தற்போது தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் பகிரங்கமாக வெளிவந்துள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லா கேலோ இந்தியா (KISCE) திட்டத்தின் கீழ் கடந்த நிதி ஆண்டில் (2021-2022) தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துள்ள ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு (2021-2022) தமிழ்நாட்டிற்கு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை எனக் கூறி அதிரவைத்துள்ளார்.
இதேபோல, 2019 முதல் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு? என எம். எம். அப்துல்லா கேள்வியெழுப்பிய நிலையில், தமிழ்நாட்டிற்கு 2019 முதல் எந்த சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என ஒன்றிய இணையமைச்சர் கிஷன் ரெட்டி பதிலளித்துள்ளார். இது போல பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணித்து வருவது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!