India
4 மாத குழந்தையை மொட்டை மாடியில் இருந்து தூக்கிய வீசிய குரங்கு.. உ.பி-யில் நடந்த சோகம் !
உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதிக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேந்தவர் நிர்தேஷ் (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
சம்பவத்தன்று, நிர்தேஷ் வழக்கம்போல் தனது 4 மாத கை குழந்தையை வீட்டிலுள்ள மொட்டை மாடிக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கே குழந்தையை கையில் வைத்துக்கொண்டு சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்துள்ளார்.
அப்போது எதிர்பாரா விதமாக திடீரென அங்கே குரங்குகள் வந்துள்ளன. இதனை கண்ட நிர்தேஷ், முதலில் அதனை விரட்ட முயன்றுள்ளார். ஆனால், மேலும் குரங்குகள் அங்கே வர, பயந்து போன நிர்தேஷ் ஓட முயற்சித்துள்ளார்.
அப்போது அவரது கையில் இருந்த குழந்தை கீழே தவறி விழ, அதை குனிந்து எடுக்க முற்பட்டுள்ளார் நிர்தேஷ். ஆனால் அதற்குள்ளே அந்த குழந்தையை பார்த்த குரங்குகள் அதை தூக்கி மொட்டை மாடியில் இருந்து கீழே வீசியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலியானது.
பிறந்து 4 மாதங்களே ஆன குழந்தையை, குரங்கு ஒன்று மாடியில் இருந்து தூக்கி வீசியதில் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!