India
மோடி ஆட்சியில் ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி.. இந்தியாவில் இருந்து வெளியேறும் அந்நிய முதலீட்டாளர்கள் !
இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வர்த்தம், தொழில் வளர்ச்சி, முதலீடுகள், வேலைவாய்ப்புகள் என அனைத்துத் துறைகளும் முற்றிலும் சிதைந்து போயுள்ளன.
குறிப்பாக, தொடர்ந்து அடிவாங்கும் பங்குச் சந்தைகள், ஜி.டி.பி வீழ்ச்சி காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் மிகக் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை, ரூபாயின் மதிப்பு 79 ரூபாய் 22 காசுகளாக இருந்தது. இது இன்று 80 ரூபாய் 04 காசுகளாக வீழ்ச்சி கண்டது. ரூபாய் மதிப்பு இந்த அளவிற்கு மோசமாக வீழ்ச்சியைச் சந்தித்து இருந்தது. மேலும் சீன நாட்டின் யுவான் மதிப்பு கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
இதனால் இந்திய பங்கு சந்தையும் பாதிப்பை சந்திக்கிறது. இதற்கு அந்நிய முதலீடுகள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியேறியதே ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கியக் காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்
அதேவேளையில் இந்திய பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள்படி சமீபத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வெளியே எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெய் விலையேற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்தியாவில் பொருளாதாரச் சிக்கல் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது தெரிவிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!
-
ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
“கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!